குறைதீர் கூட்டம் 337 மனுக்கள் ஏற்பு
திருவள்ளூர்,
திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 337 மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 85, சமூக பாதுகாப்பு திட்டம் 78, வேலைவாய்ப்பு வேண்டி 42, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 62, இதர துறை 70 என, மொத்தம் 337 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், தனி துணை கலெக்டர் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.