வைக்கோல் லாரியில் தீ
எலச்சிபாளையம்: திருச்சி, மண்ணச்சநல்லுாரில் இருந்து விற்பனைக்காக, 50,000 ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. எலச்சிபாளையம் யூனியன், மணலி ஜேடர்-பாளையத்தில், நேற்று மதியம், 2:00 மணிக்கு லாரி சென்றுகொண்-டிருந்தபோது, மின் ஒயரில் உரசி தீப்பற்றியது. இதையறிந்த டிரைவர்
திருப்பதி, 45, அரை கிலோ மீட்டர் துாரம் லாரியை ஓட்-டிச்சென்று, யாரும் இல்லாத வாரச்சந்தை பகுதியில்
நிறுத்தினார். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலு-வலர் கரிகாலன், ராசிபுரம்
தீயணைப்பு நிலைய அலுவலர் பழகார ராமசாமி தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை
அணைத்தனர்.
யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், இரண்டு மணி நேரம் அப்பகுதி முழுவதும் புகை
மண்டலமாக காட்சியளித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement