புகழிமலை கோவிலில் தை மாத சஷ்டி பூஜை
கரூர்: பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிர-மணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு தை மாத சஷ்டியை-யொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு
காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை
சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் தை மாத சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement