முருகன் கோவிலில் தைப்பூச பால் காவடி
திருக்கனுார்: செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச பால் காவடி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 53ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 7:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.
தொடர்ந்து, மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்கினி சட்டி எடுத்தல், ஆகாய மாலை அணிவித்து செடல் உற்சவம் நடக்கிறது.
மேலும், காலை 9:30 மணிக்கு டயர் வண்டி இழுப்பது, வேல் அணிந்து வருவது, தேர் இழுப்பது நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement