தொழிலாளி அடித்துக்கொலை உறவினர்கள் மூவர் கைது மதுபோதையால் விபரீதம்

குஜிலியம்பாறை:திண்டுக்கல்மாவட்டம் குஜிலியம்பாறை முத்தக்காபட்டியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் கடவூர் மேட்டூரை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கவேல் 55. இவர் குஜிலியம்பாறை லந்தக்கோட்டை முத்தக்காபட்டியில் உள்ள தங்கை சின்னப்பொண்ணு வீட்டிற்கு வந்தார். நேற்றுமுன்தினம் மாலை உறவினர்கள் சீரங்கன், கணேசன், பூமி ஆகியோருடன் சேர்ந்து தங்கவேல், கரூர் கானியாளம்பட்டியில் உள்ள டாஸ்மாக் சென்று மது அருந்தினார்.

அடித்துக்கொலை



அதில் தங்கவேலுக்கும், சீரங்கனுக்கும் குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பூமி, சீரங்கன், கணேசன் சேர்ந்து தங்கவேலை தாக்கினர். பின்னர் மூவரும் காயமடைந்த தங்கவேலை, அவரது தங்கை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு சென்றனர்.

அங்கு சிறிது நேரத்தில் அவர் இறந்தார். தங்கவேலை, அடித்து கொன்றதாக சீரங்கன் உள்ளிட்ட மூவரையும் வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான குஜிலியம்பாறை போலீசார் கைது செய்தார்.

Advertisement