வசந்த நகரில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் மக்கள் பாதிப்பு

பள்ளிப்பாளையம்: வசந்தநகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
பள்ளிப்பாளையம் அருகே வசந்தநகர் பகுதியில் இருந்து பிரேம்நகர் பகுதிக்கு செல்லும் சாலையின் வளைவு பகுதியில், திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் சுகாதார கேடு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. நாளுக்குநாள் குப்பை, கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
பொது மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை துாய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இதை சேகரித்து குப்பை, கழிவுகளை கிடங்குகளில் சேர்த்து, தரம் பிரிக்க பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement