சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஓசூர: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்திகிரி கூட்ரோட்டில் இருந்து,
கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள டி.வி.எஸ்., கம்பெனிக்கு மாநில
நெடுஞ்சாலை செல்கிறது.
இச்சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, டிப்பர் லாரிகள், சரக்கு வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இச்சாலையிலுள்ள தனியார் பள்ளி அருகே, மிடுகரப்பள்ளி கிராமத்திற்கு செல்ல சாலை பிரிகிறது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலையை கடக்க முயற்சி செய்யும் பொதுமக்களும் காயமடைந்து வருகின்றனர்.
மிடுகரப்பள்ளி செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியிலுள்ள யூ டர்னில் திரும்பும் போதுதான், விபத்து அதிகமாக நடக்கின்றன. தனியார் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் அப்பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு வரும் மக்கள், விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை, மிடுகரப்பள்ளி பிரிவு சாலை அருகே, வேகத்தடை அமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement