ரூ.29.67 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்



ரூ.29.67 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்


கரூர்: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலராஜபுரத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இங்கு, வருவாய்த்துறை சார்பில் நத்தம் இணைய வழி பட்டா, 10 பயனாளிகளுக்கும், 27 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஆறு பேருக்கு, 1.41 லட்சம் ரூபாய் மதிப்பிலும்,
தோட்டக்கலைத் துறை சார்பில் மூவருக்கு, 70,336 ரூபாய்- மதிப்பில் விதைகளும் என மொத்தம், 51 பயனாளிகளுக்கு, 29.67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement