சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு

பாகூர் : சொத்து பிரச்னை காரணமாக தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

பாகூர் புதிய காமராஜர் நகரை சேர்ந்தவர் குப்பம்மாள், 55; இவர், கடந்த 2ம் தேதி மாலை, வீட்டிலிருந்து கடைக்கு நடந்து சென்றார்.

வழியில், தனது மகள், மற்றும் மருமகனை, சொத்து பிரச்னை காரணமாக, அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் தாக்கி கொண்டிருப்பதைக் கண்டு, குப்பம்மாள் தடுக்க முயன்றார். அப்போது, அவரையும் அந்த கும்பல் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதில், காயமடைந்த கும்பம்மாள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில்,காமராஜர் நகரை சேர்ந்த அம்பிகா, காத்தவராயன், சங்கீதா ஆகியோர் மீது, பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement