போலீசார் சோதனை; 8 பேரிடம் விசாரணை

கோவை; ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆம்னி பஸ் ஸ்டாண்ட், அனைத்து பார்சல் சர்வீஸ் மையங்கள், மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகள், வீடுகள், ரயில்வே தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

உதவி கமிஷனர் தலைமையில் இரு இன்ஸ்பெக்டர்கள், 3 எஸ்.ஐ.,கள், 50 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமான நபர்கள், கஞ்சா, குட்கா, பான்பராக் பதுக்கல் குறித்து சோதனை நடத்தப்பட்டது. பார்சல் சர்வீஸ் மையங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருட்கள் அனுப்பப்படுகிறதா என, ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது சந்தேகத்தின் அடிப்படையில், எட்டு பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். சோதனை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement