வெள்ளிக்குறிச்சி பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் தொடர்ந்து 43 வது ஆண்டாக தைப்பூச திருவிழாவிற்காக பாதயாத்திரையாக சென்றனர்.

வெள்ளி குறிச்சி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற நாட்களில் சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை நடைபெறும்.

வரும் 11ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இக்கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறிச்சியில் இருந்து பாதயாத்திரை குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்ட பின்னர் பாதயாத்திரையாக திருப்பாச்சேத்தி, திருப்புவனம்,மதுரை,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநி சென்றனர்.

Advertisement