பெண்களுக்கு தங்கம்; அமைச்சர் பெருமிதம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849077.jpg?width=1000&height=625)
திருப்பூர்; தமிழக அரசு, திருமண உதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஏழை பெண்களின் திருமணத்துக்கு, தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் விழா, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி வரவேற்று பேசினார்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பயனாளி பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கினர். மொத்தம் 173 பெண்களுக்கு, 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 1.384 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது.
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2021 - 2022 முதல் 2024 - 25 ம் ஆண்டு வரை, 3,243 பெண்களுக்கு, மொத்தம் 13 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 25.944 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாக்., யாத்ரீகர்கள் 68 பேர்!
-
சந்திரயான்-4 விண்கலம் 2027ல் விண்ணில் பாயும்!
-
மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்
-
மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!
-
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
-
அரசு ஊழியர்களை குறைக்க டிரம்ப் முயற்சி; கோர்ட் உத்தரவால் சிக்கல்