முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி

4

சென்னை: வீடுகளில், மின் வாரிய ஊழியர்கள், மின் பயன்பாடு கணக்கெடுத்த தேதியில் இருந்து, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.

பின், அபராதத்துடன் சேர்த்து, கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படும். வெளியூர் செல்வது உள்ளிட்ட காரணங்களால், சிலர் மின் கட்டணம் செலுத்த மறந்து விடுகின்றனர். அவர்கள், மின் வினியோகம் துண்டிப்பதை தவிர்க்க, முன்கூட்டியே உத்தேசமாக மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.

இதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் வட்டியை, மின் வாரியம் வழங்குகிறது. அதன்படி, வரும், 2025 - 26ம் நிதியாண்டிற்கு முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு, 2.70 சதவீதம் ஆண்டு வட்டி வழங்க, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கும் இதே அளவு வட்டி வழங்கப்படுகிறது.

Advertisement