புயல் நிவாரணத்தில் முறைகேடு வி.ஏ.ஓ.,விற்கு 8 ஆண்டு சிறை
கடலுார் : தானே புயல் நிவாரணத்தில் முறைகேடு செய்த வி.ஏ.ஓ.,விற்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.
கடலுார் மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய 'தானே' புயலில் பாதித்த மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதில், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம், சித்திரைசாவடி கிராமங்களில் வழங்கிய நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். நிவாரண நிதியில் ரூ.4 லட்சம் முறைகேடு செய்த வி.ஏ.ஓ., சம்பத் மீது கடலுார் ஊழல் தடுப்பு வழக்குகள் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு தரப்பில் பாலரேவதி ஆஜராஜானர். நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், வி.ஏ.ஓ., சம்பத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும்
-
அதே அடி... அதே தோல்வி... பரிதாப நிலையில் டில்லி காங்கிரஸ்
-
டில்லியில் ஜெட் வேகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை: வீழ்ந்தது கெஜ்ரிவால் ராஜ்ஜியம்!
-
ஈரோடு இடைத்தேர்தல்; 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., முன்னிலை
-
டில்லி சட்டசபை தேர்தல்; பெரும்பான்மையை தாண்டி பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை