சகோதரர்களை தாக்கிய 7 பேருக்கு வலை
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபத்தை சேர்ந்தவர் கஜேந்திரன்,41; கடந்த மாதம் 5ம் தேதி, ஊர் கோவில் சம்பந்தமாக சிறப்பு அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற கஜேந்திரனின் சகோதரர் ஆறுமுகம், ஊர் சம்பந்தமாக பொது கணக்கு கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி, 55; சேதுபதி,20; ஏழுமலை, 82; புஷ்பராஜ், 42; செல்வம்,38; அய்யப்பன் (எ) பிரபாகரன்,45; ஜெயராமகிருஷ்ணன், 22; ஆகியோர் ஆறுமுகத்தை தாக்கினர். தடுக்க முயன்ற கஜேந்திரனையும் தாக்கினர். கஜேந்திரன் காயமடைந்து சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் அவர் அளித்த புகாரில் புகழேந்தி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா வைத்த விவகாரம்: நகர தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்
-
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி
-
பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்
-
டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
Advertisement
Advertisement