இறைச்சி கடைகளை மூட உத்தரவு

அரியாங்குப்பம்: வள்ளலார் ஜோதி தினமான வரும் 11ம் தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

வள்ளலார் ஜோதி தினமான வரும் 11ம் தேதி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அனைத்து, ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் மூட வேண்டும். மீறி கடை திறந்திருந்தால், அபராதம் விதிப்பதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement