மகள் மாயம்: தந்தை புகார்

அரியாங்குப்பம்: மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் ஷகிலா, 22, இவர் தனியார் கல்லுாரியில், தொலைத்துார கல்வியியல் மூலம் எம்.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement