வேன் மோதி விபத்து ஆட்டோ டிரைவர் பலி
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே விபத்தில் சிக்கிய ஆட்டோ டிரைவர் மீது வேன் மோதி இறந்தார்.
தியாகதுருகம் அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; ஆட்டோ டிரைவர். இவர், கடந்த, 6ம் தேதி மாலை 7:30 மணிக்கு, சின்னமாம்பட்டு கிராமத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி, புறவழிச்சாலையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது, சென்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது.
அப்போது அதே திசையில் வந்த மகேந்திரா வேன், விபத்தில் சிக்கிய வெங்கடேசன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement