ஏற்காட்டில் அரசு ஏகலைவா பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

9


ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது.

சேலம் தும்பல் நொய்யமலை பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் இளையகண்ணு(37) என்பவர், கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்காலிகமாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை இவர் மீது பழங்குடியினர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செல்வாக்கு இருந்ததால் அதிகாரிகள் இவரை கண்டித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி, சேலம் குழந்தைகள் நல அலுவலர்கள், பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது 12 மாணவிகள், இளையகண்ணுவின் பாலியல் சீண்டல் குறித்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். பள்ளி மாணவி ஒருவர், சேலம் கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். விசாரணையில் இளையகண்ணு மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையறிந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில், சென்னையில் நேற்று, இளையகண்ணுவை கைது செய்த போலீசார் ஏற்காடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

Advertisement