சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தைப்பூச நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்ட நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூசாரிகள் சிறப்பு பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரான்சில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
-
இதை செய்யாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கொன்னையாரில் நிலா பிள்ளையார் விழா
-
வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்
-
பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து
Advertisement
Advertisement