திருவள்ளூர்: புகார் பெட்டி ; திசைமாறி வைக்கப்பட்டுள்ள மின்விளக்கு ஒளிரும் பகுதி

திசைமாறி வைக்கப்பட்டுள்ள மின்விளக்கு ஒளிரும் பகுதி



கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முத்துக்கொண்டாபுரம். இங்கு, கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கில் சில எரியாமலும், ஒரு விளக்கு திசை மாற்றி ஆற்று பக்கமாக திரும்பி வைக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

- எல். விஜயேந்திரன்,

கனகம்மாசத்திரம்.

Advertisement