மூதாட்டி அடித்து கொலை

திண்டுக்கல்:திண்டுக்கல், பிஸ்மி நகரை சேர்ந்த டீ மாஸ்டர் ஜெய்லாபுதீன், 72; இவருக்கும், மனைவி முகமதா பீவி, 63, என்பவருக்கும் தகராறு இருந்தது.

நேற்று அதிகாலை, வெளியில் சென்ற ஜெய்லாபுதீன் சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, முகமதாபீவி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மது போதையில் ஜெய்லாபுதீன் மனைவியை கொன்றாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement