அடுத்த மாதமும் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் பிப்.,16, 23ல் மற்றும் மார்ச்சில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவிழ்க்க முடியவில்லை என கிழக்கு தொகுதி, சோழவந்தான் தொகுதி காளை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதற்கு அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரு தொகுதிக்கு போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி பிப்.,11,12ல் கிழக்கு தொகுதிக்கு போட்டி நடந்தது. 1850 காளைகள், 772 வீரர்கள் பங்கேற்றனர்.
பிப்.,16ல் சோழவந்தான் தொகுதி காளைகளுக்கு போட்டி நடக்கிறது. பிப்.,23ல் திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பு (வீர விளையாட்டு மீட்பு குழு) சார்பில் போட்டி நடக்கிறது. அடுத்த மாதமும் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.