கால்நடை தடுப்பூசி முகாம் நாளை முதல் துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், கால்நடை கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நாளை 19ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த முகாம் வரும், மார்ச் 19ம் தேதி வரை நடக்கிறது.

கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு தடுப்பூசி போடப்பட வேண்டும்.ஒருமுறை வாழ்நாள் தடுப்பூசி போடுவதால் கால்நடைகள் நீண்டகால எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கால்நடைகளுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement