போலீஸ் செய்திகள்.....

கஞ்சா விற்றவர்கள் கைது

திண்டுக்கல்: என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் கஞ்சா விற்ற என்.ஜி.ஓ.,காலனி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ்28, ஓடையூரை சேர்ந்த விக்னேஷ்25, என்.ஜி.ஓ.,காலனி கணபதி26, ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

7 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் : சுப்ராம்பட்டரையை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமாரை40, அமைச்சர் பெரியசாமி பாதுகாப்பு உதவியாளரான போலீஸ் ரவி, தி.மு.க., கவுன்சிலர் சுபாஷ் உட்பட சிலர் தாக்கினர். இதையறிந்த வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். நேற்று 2 வது நாளாக வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ்காரர் ரவி, தி.மு.க.,கவுன்சிலர் சுபாஷ் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

நத்தம்: சிறுகுடியை சேர்ந்தவர் ராமசாமி 70. இவரது மனைவி சந்திரா 65. பிப்.15 இரவு சிறுகுடியில் சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்த போது பின்னால் வந்த நபர் சந்திராவை தலையில் தாக்கி 6 அரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பினார். சி.சி.டி.வி கேமரா பதிவுப்படி மதுரை மாவட்டம் திருமங்கலம்- உச்சப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் திரடியது தெரிந்தது. அவரது அலைபேசி சிக்னலை வைத்து கைது செய்தனர்.

Advertisement