திருப்புவனம் கால்நடை சந்தையில் குவிந்த வியாபாரிகள்

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று காலை நடந்த கால்நடை சந்தையில் ஆடு, கோழி, சேவல் வாங்க வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனர்.
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை காலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும். வரும் 26ம் தேதி சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்றைய சந்தையில் அதிகளவு ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாகவும், 20 கிலோ எடை கொண்ட கிடா 18 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகின.
சிவராத்திரி விழாவில் கிடா, சேவல் தான் அதிகளவு பலியிடப்படும், நேற்றைய சந்தையில் கிடா, சேவலின் விலை கிடுகிடு வென உயர்ந்து காணப்பட்டது. கால்நடைகள் வாங்க வெளியூர் வியாபாரிகள் பலரும் வாகனங்களில் குவிந்ததால் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும்
-
'கேஸ்' நடத்த காசில்லையாம்! செயின் பறித்தவர் சிக்கினார்
-
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
-
சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை
-
கொலையாளிக்கு அடைக்கலம் கணவன், மனைவிக்கு 'கம்பி'
-
சிறுமி படத்தை சித்தரித்த தி.மு.க., நிர்வாகி மகன் கைது
-
விபத்து வாகனத்தை அகற்றுவதில் அலட்சியம் திருவாலங்காடு வாகன ஓட்டிகள் திக்... திக்