மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால், கட்டடத்திற்கு ஊராட்சி நிர்வாகம் இதுவரை மின்இணைப்பு பெறாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர், தினமும் அலுவலகத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் தங்கியிருந்து மக்களின் குறைகள் கேட்டறிந்து நிவர்த்தி செய்கிறார்.

அங்கு மின்இணைப்பு இல்லாததால்ல கிராம நிர்வாக அலுவலர்ல திருத்தணி நகரில்ல ஒரு வாடகை அறையில் தங்கி, விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சான்றுகளை வழங்குகிறார்.

தற்போது, மாணவர்களுக்கு சான்றுகள், அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பம் மற்றும் பட்டா மாற்றம் போன்ற பணிகள் ஆன்லைன் வாயிலாக செய்ய வேண்டியுள்ளதால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்இணைப்பு முக்கியம்.

இதனால், வேலஞ்சேரி ஊராட்சி மக்கள் மற்றும் பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரை தேடி, திருத்தணி நகருக்கு வருகின்றனர்.

மேலும், கட்டடம் முறையாக பராமரிக்காததால் பழுதாகி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலக கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement