ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா

ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் வீதி உலா புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி விழாவின் 3ம் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்றனர். கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10:00 மணிக்கு மேல் கோயிலுக்கு திரும்பினர். இதனால் நேற்று காலை 7:00 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை சந்திரகாச்சி ' ஏசி ' ரயில் 27ல் ரத்து
-
எம்.ஜி.ஆர்.நகரில் பெருக்கெடுத்த கழிவு நீர் வீடுகளுக்குள் முடங்கி தவித்த மக்கள்
-
கார்கில் நகரில் ரூ.10 கோடியில் ராட்சத குளம் வாரிய குடியிருப்புகளுக்கு பாதிப்பு?
-
நாட்டின் முதல் '3டி பிரின்டட்' மாளிகை கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் அறிமுகம் சென்னை ஐ.ஐ.டி., ஸ்டார்ட் அப் கட்டமைப்பு
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
Advertisement
Advertisement