கிருஷ்ணன் கோயில் பழமை கல்வெட்டு கண்டெடுப்பு

அரியலுார்:நிலதானம் வழங்கிய தகவல் பொறித்த 285 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரியலுார் கிருஷ்ணன் கோயிலில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று நடந்த பணியின்போது, அங்குள்ள உள் மண்டபத்தில், தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 4 அடி உயரமுள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அரியலுார் அரசு கலைக் கல்லுாரி வரலாற்று துறை தலைவர் ரவி கூறியதாவது:
இந்த கல்வெட்டில், பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதார சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. 1739ம் ஆண்டு, அரியலுார் ஜமீன்தார் விஜய ஒப்பில்லாத மழவராயரால் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருமாள் கோயிலுக்கும், கிருஷ்ணன் கோயிலுக்கும் நிலதானம் வழங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement