தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல... எங்களின் அடையாளம்; ஸ்டாலின் காட்டம்

46

சென்னை: வக்கீல்கள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல, அடையாளம் என்று கூறி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவின் விவரம் வருமாறு:


வக்கீல்கள் சட்ட திருத்த மசோதா 2025 என்பது சட்டத் தொழிலின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். 2014ம் ஆண்டு முதலே நீதித்துறையின் சுதந்திரத்தை மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டு வருகிறது.


தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) மூலம் நீதித்துறையின் பணி நியமனங்களை அபகரிக்க முயற்சி மேற்கொண்டது. அதன் பின் நீதிபதிகள் நியமனங்கள், பணியிட மாற்றங்கள் தொடர்பான கொலீஜியத்தின் பரிந்துரைகளை புறக்கணித்தது.


இப்போது, பார் கவுன்சிலின் கட்டுப்பாடுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீதித்துறைக்கான சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் என்ற பெயரை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புவதால் தமிழ் மீதான பா.ஜ.,வின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாக தெரிகிறது.


தமிழ்நாடு என்பது எங்கள் பெயர் அல்ல, அது எங்கள் அடையாளம்.


தன்னிச்சையான எதிர்ப்புகள் இந்த மசோதாவை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும், அதை புதியதாக செயல்படுத்தப்படும் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.


திருத்த மசோதாவை முழுவதுமாக திரும்ப பெறவேண்டும் என்றும் வக்கீல் தொழிலின் சுயாட்சிக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தி.மு.க., கோருகிறது.

Advertisement