பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனச்சரக யானைகள், வனத்தை ஒட்டிய பகுதி தோட்டத்தில் புகுவது வாடிக்கை. நொகனுார் கிராமத்தில், ஒற்றை ஆண் யானை நேற்று காலை சுற்றித்திரிந்தது.
இதேபோல், தேன்கனிக் கோட்டை முள்பிளாட் வனத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை ஆண் யானை, உப்பராயனப்பள்ளி, நேரலட்டி வழியாக அகலக்கோட்டையை அடுத்த மல்லேஸ்வரா மலை பின்புறமுள்ள கூடன்ஏரி பகுதிக்கு, காலை, 9:00 மணிக்கு வந்தது.
அங்கு விவசாய நிலத்தில் கட்டியிருந்த விவசாயி முத்தப்பா என்பவருக்கு சொந்தமான, எட்டு மாத கன்று குட்டியை தந்தத்தால் குத்திக் கொன்றது. தோட்டத்தில் மனைவியுடன் நின்றிருந்த முத்தப்பா, யானையை பார்த்து ஓட்டம் பிடித்தார்.
அதே தோட்டத்தில் பம்ப் செட் கொட்டகை கூரையை சேதப்படுத்திய யானை, ஜவளகிரி அருகே ஜல்லி மாரியம்மன் கோவிலை ஒட்டிய வனப்பகுதிக்குள் சென்றது. பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்த யானையால் மக்கள் பீதியடைந்தனர்.
மேலும்
-
தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் செங்கை புத்தக திருவிழா
-
பீஹாரில் லாரி - வேன் மோதியதில் 7 பேர் பலி; ம.பியில்., 6 பேர் உயிரிழந்த பரிதாபம்
-
நான் பணக்காரன் வீட்டுப் பிள்ளை அல்ல; தாயின் வறுமை நினைவுகளை பகிர்ந்து துரைமுருகன் உருக்கம்
-
ஜெர்மனியில் ஆட்சியைப் பிடிக்கிறது எதிர்க்கட்சி; தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் அதிபர் ஒலாப்
-
ஆஸ்திரேலிய முதியவரின் இறுதி ஆசை; இந்தியாவில் சொன்ன வாக்கை காப்பாற்றிய மனைவி நெகிழ்ச்சி!
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு