ஜெயலலிதா பிறந்த நாள் 1,000 பேருக்கு அன்னதானம்

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி கட்டடம் அருகே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் மீட்பு குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement