பவானியில் ஒரே இரவில் ௩ இடங்களில் திருட்டு
பவானி: பவானி, காமராஜர் நகர், பூங்கா வீதி பகுதியில் வசித்து வரு-பவர் செல்வராஜ், 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி மனோ, 40; இருவரும் நேற்று முன்தினம் காசிக்கு புறப்பட்டு சென்றனர். இதையறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
இதேபோல் பவானி - மேட்டூர் ரோட்டில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை எதிரே டீக்கடை பூட்டை உடைத்து, 7,௦௦௦ ரூபாய், மற்றொரு டீக்கடையில், ௧,௦௦௦ ரூபாயை திருடி சென்றுள்ளனர். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு குறித்து, பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement