பட்டுக்கூடு 312 கிலோ ரூ.2.26 லட்சத்திற்கு ஏலம்



பட்டுக்கூடு 312 கிலோ ரூ.2.26 லட்சத்திற்கு ஏலம்


ராசிபுரம்:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 312 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 770 ரூபாய், குறைந்தபட்சம், 690 ரூபாய், சராசரி, 724 ரூபாய் என, 312 கிலோ பட்டுக்கூடு, 2.26 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement