'ஆன்லைனில்' போதை மாத்திரை: 3 பேர் கைது
திருப்பூர்; 'ஆன்லைனில்' போதை மாத்திரை ஆர்டர் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், காந்திநகர், பத்மாவதிபுரத்தை சேர்ந்த விஜய், 22, அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையத்தை சேர்ந்த தினகரன், 19, நந்தகுமார், 20. திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த நண்பர்கள் மூவரும், ஆன்லைனில் 200 வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக ஆர்டர் செய்துள்ளனர். டில்லியிலிருந்து திருப்பூருக்கு கூரியரில் வந்த மாத்திரைகளை, 15 வேலம்பாளையம் போலீசார் கைப்பற்றி, மூவரையும் கைது செய்தனர். போதை மாத்திரைகளை கரைத்து, ஊசிமூலம் உடலில் செலுத்தி போதையேற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement