சாரணர்களுக்கான பயிற்சி முகாம்

புதுச்சேரி: காலாப்பட்டு செவாலியர் செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரணர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் வேலாயுதம் தலைமை தாங்கினார். முகாமினை சாரண இயக்கத்தின் முன்னாள் இணை செயலாளர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். மாநில பயிற்சி ஆணையர் ஆரோக்கியமேரி ஸ்டெல்லா பயிற்சி அளித்தார்.
மாவட்ட பயிற்சி ஆணையர் அய்யப்பன் ஊதல் குறியீடு மற்றும் முடிச்சுப் பயிற்சி அளித்தார். முகாமில் சாரண இயக்கத்தின் குறிக்கோள், அடையாளம், வணக்க முறை, இடது கைகுலுக்கல், உறுதிமொழி, வாக்குறுதி போன்ற அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து காலப்பட்டு கடற்கரையில் துாய்மை பணி நடந்தது. நிறைவு விழாவில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முகாமில், தலைமையாசிரியர் மரிய மார்ட்டின், புதுச்சேரி சாரண சாரணிய இயக்கத்தின் மாநில அமைப்பு ஆணையர் சண்முகம், சாரண ஆசிரியர் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!