நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : லால்புரத்தில் உண்ணாவிரதம்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியுடன், ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து லால்புரம் கிராம மக்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம், சி.கொத்தங்குடி, சி. தண்டேஸ்வரர்நல்லுார், பரமேஸ்வரநல்லுார், உசுப்பூர், பள்ளிப்படை ஆகிய 6 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஊராட்சி மக்களும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லால்புரம் ஊராட்சி மக்கள் 1,000த்திற்கும் மேற்பட்டோர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சேகர், ஆனந்த், சாய்பிரகாஷ், சத்தியமூர்த்தி, மூர்த்தி ,ராஜேந்திரன், தமிமுன் அன்சாரி, ரவி, கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!