மேலுாரில் கடையடைப்பு வியாபாரிகள் முடிவு

மேலுார்: மேலுார் தினசரி காய்கறி மார்க்கெட் சங்க வியாபாரிகள் கூட்டம் துணைத் தலைவர் சுலைமான் தலைமையில் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் சவுந்தரராஜன் தாலுகா தலைவர் மணவாளன், பொதுச்செயலாளர் சேகர், துணைத்தலைவர் அடக்கி வீரணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து முழுமையாக செயல்படுத்தவும், டூவீலர் பார்க்கிங் பகுதியில் நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்டக்கூடாது,

நகராட்சி எல்லைக்குள் மைக் மூலம் காய்கறி வியாபாரம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்தனர்.

Advertisement