புகையிலை விற்ற பெண் கைது

கூடலுார்: கூடலுார் பெட்ரோல் பங்க் அருகே தனியார் பள்ளிக்கு முன்பு கடைகளில் புகையிலை விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தடைசெய்யப்பட்ட போதை புகையிலையை பறிமுதல் செய்து பூங்கொடி 52, யைகைது செய்தனர்.

Advertisement