மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சி, பழங்குடியினர் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியில், மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக துார்வாரி சீரமைக்காததால், கோரைபுற்கள், செடி, கொடிகள் வளர்ந்து, கால்வாயில் நீர்வழித்தடம் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், மழை பெய்தால், இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement