சோழவரத்தில் ரோடு ரோலர் திருடி லாரியில் ஏற்றிச்சென்ற மூவர் கைது

சோழவரம்:சென்னை, செனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன், 31. இவர், சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு ரோடு ரோலர், மீஞ்சூர் பகுதியில் சாலைப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்டது.
பணிகள் முடிந்த கடந்த செப்டம்பர் 15ல், மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்வதற்காக, மீஞ்சூர் - வண்டலுார் வெளி வட்ட சாலை வழியாக சென்றது. சோழவரம் சுங்கச்சாவடி அருகே செல்லும், ரோடு ரோலர் பழுதானது. ரோடு ரோலரை டிரைவர் அங்கேயே விட்டுவிட்டு சென்றார்.
நீண்ட காலமாக ரோடு ரோலர் அதே இடத்தில் நின்ற நிலையில், கடந்த, 24ம் தேதி, வாகனத்தை சரி செய்து கொண்டு செல்வதற்காக தினகரன், மெக்கானிக்குடன் அங்கு வந்தார். அங்கிருந்து ரோடு ரோலரை காணவில்லை.
இதுகுறித்து, சோழவரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுங்கச்சாவடி பகுதி, செங்குன்றம் சாலையிலும் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 'எய்ச்சர்' லாரி ஒன்றில், ரோடு ரோலர் ஏற்றிச் செல்லப்பட்டது தெரிந்தது.
அதையடுத்து, லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், 34, கோபிநாத், 52, வெங்கடேசன், 34, ஆகிய மூன்று பேர், ரோடு ரோலரை திருடியது தெரிந்தது.
நீண்ட காலமாக கேட்பாரற்று கிடந்ததால், கிரேன் உதவியுடன், ரோடு ரோலரை லாரியில் ஏற்றி, திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து, சோழவரம் போலீசார், மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரோடு ரோலர், எய்ச்சர் லாரி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும்
-
170 கர்ப்பிணிக்கு சமுதாய வளைகாப்பு விழா
-
வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் புகார்
-
'3 அமைச்சர் மனு வாங்கியும் எதுவும் செய்யவில்லை'
-
'தமிழகத்தை குறி வைத்து தாக்குவது ஜனநாயகம் அல்ல'
-
சேலத்தில் கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை தேவை கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
-
250 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்