திருமழிசை சாலையோரம் வீணாகும் மின்கம்பங்கள்

திருமழிசை:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி. இங்குள்ள பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே, 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒராண்டாக்கும் மேலாக இந்த மின்கம்பங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வெயிலிலும், மழையிலும் வீணாகி வருகிறது.
இந்த மின்கம்பங்கள் குறித்து திருமழிசை மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையோரம் வீணாகும் மின்கம்பம் குறித்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
-
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்
Advertisement
Advertisement