பொதுமக்கள்குறைதீர் முகாம்


பொதுமக்கள்குறைதீர் முகாம்


தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான, குறைதீர்க்கும் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வார புதன்கிழமைகளில் நடக்கிறது.
நேற்று, தர்மபுரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 43 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 43 மனுக்களின் பிரச்னைகள் தீர்த்து வைக்கபட்டன. மேலும், புதிதாக, 29 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement