மயான காளியம்மன் கோவில்திருவிழா: தீர்த்தக்குட ஊர்வல
மயான காளியம்மன் கோவில்திருவிழா: தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம்:குமாரபாளையம் மயான காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மயான காளியம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மதியம், ௩:௦௦ மணிக்கு மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், மயான கொள்ளை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு வைபவம், நாளை, எருமைக்கிடா வெட்டுதல், மார்ச், 1 மாலை, 6:00 மணிக்கு மகா குண்டம், பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
-
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்
Advertisement
Advertisement