சித்திக்கு கத்திக்குத்து சிறுவன் சிக்கினார்
திருப்பத்துார்: சொத்து தகராறில், தி.மு.க., --- பஞ்., தலைவியை, கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். மூன்று ஆண்டுகளுக்கு முன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இவரது மனைவி, பஞ்., தலைவி ஷோபனா, 45, தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவருக்கும், கணவரின் அண்ணன் பாண்டியனுக்கும் சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மூன்று மாதங்களுக்கு முன், ஷோபனாவை பாண்டியன் குடும்பத்தார் தாக்கியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாண்டியனின், 17 வயது மகன், ஷோபனாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். உமராபாத் போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநகராட்சி அலுவலகத்தில் படம் எடுத்த நாகப்பாம்பு; ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்
-
என்.எஸ்.எஸ்., சாகசப் பயிற்சி; சிக்கண்ணா மாணவர் தேர்வு
-
துாய்மை பணியாளர் விழிப்புணர்வு முகாம்
-
மாநில தடகளம் தேவகோட்டை முதலிடம்
-
தி.மு.க.,விற்கு எதிராக 70 சதவீத வாக்காளர்கள்: அமைப்பு செயலாளர் பேச்சு
-
'லஞ்சப்பண விவகாரம் விசாரணை நடக்கிறது'
Advertisement
Advertisement