கொத்தனார் சாவு போலீஸ் விசாரணை

புதுச்சேரி : வில்லியனுார் அருகே கொத்தனார் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மேல்ஆனைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு, 56; கொத்தனார். இவர், புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் தங்கி, தனியார் மருத்துவ கல்லுாரியில் கட்டட வேலை செய்து வருகிறார்.

குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு, அவரது அறையில் மயங்கி கிடந்தார். சக தொழிலாளர்கள் மீட்டு, அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்ட தாக தெரிவித்தனர். புகாரின் பேரில், வில்லியனுார் போலீ சார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement