ஸ்டூடியோவில் திருடிய இருவர் சிக்கினர்
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பஜார் பகுதியில், நளன், 45, என்பவர், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த மாதம் 20ம் தேதி இரவு, ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, லென்ஸ், உபகரணங்கள் மற்றும் 30,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட அழிஞ்சிவாக்கம் அடுத்த அத்திபேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், 25, மற்றும் 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கேமரா மற்றும் அதன் உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர். இருவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
lஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் புனிதவள்ளி, 50. இவர், இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார். அவரது வீடு நேற்று முன்தினம் காலை திறந்து கிடந்தது.இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் புனிதவள்ளிக்கு மொபைல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தனர். புனிதவள்ளி வந்து பார்த்த போது, 2 சவரன் நகை மற்றும் காஸ் சிலிண்டர் மற்றும் 'டிவி' உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.