இரும்பு உருளை ஏற்றிய லாரி குன்றத்துாரில் கவிழ்ந்து விபத்து

குன்றத்துார், 2--
ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் கார் உதிரி பாகம் தாயரிக்கும் தொழிற்சாலையில் இருந்து, 4,000 கிலோ எடையுள்ள இரும்பு உருளைகளை ஏற்றிக் கொண்டு, அம்பத்துார் தொழிற்பேட்டை நோக்கி, லாரி ஒன்று நேற்று காலை சென்றது.
லாரியை, முகமது அஜிஸ், 40, என்பவர் ஓட்டிச் சென்றார். ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, குன்றத்துார் செல்லும் நெடுஞ்சாலையில்,சிறுகளத்துார் பகுதியில் உள்ள சாலை வளைவில் லாரி வேகமாக சென்றபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக, அங்கு யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதியில் இருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
Advertisement
Advertisement