தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரம்

கோபால்பட்டி: மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்து தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது.

இதையொட்டி கோபால்பட்டியில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க., சார்பில் ஹிந்தி மொழியை எதிர்த்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன்,மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Advertisement