அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

போடி: போடி மேலத் தெரு பால மணிகண்டன் 25. திருப்பூர் பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்கிறார். போடி சர்ச் தெரு விஷ்ணு 23. இருவரும் நண்பர்கள். ஓராண்டுக்கு முன்பு குரங்கணியில் நடந்த நிகழ்ச்சியில் விஷ்ணுவின் ஒரு பவுன் செயின் காணாமல் போனது. செயினை பாலமணிகண்டன் எடுத்து இருக்கலாம் என கேட்டது சம்பந்தமாக இருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது.

நேற்று திருப்பூரில் இருந்து போடிக்கு வந்த பால மணிகண்டனிடம் செயினை தருமாறு விஷ்ணு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஷ்ணு பாலமணிகண்டனை அரிவாளால் கழுத்தில் வெட்டி தப்பி ஓடினார். பால மணிகண்டன் போடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போடி டவுன் போலீசார் விஷ்ணுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement